வால்பாறையில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகள் அமைப்பு!

கோவை: வால்பாறையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரும் பொதுமக்களை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரும் பொதுமக்களை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று விரைவில் பரவும் அபாயம் உள்ளது.



இந்நிலையில், வால்பாறையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க ஸ்டான் மோர் சாலை, நல்ல காத்து பாலம், நடுமலை பாலம், புது தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகளை வருவாய்த்துறையினர் அமைத்துள்ளனர்.



இந்த சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் நகருக்கு வருபவர்கள் அனைவரையும் விசாரணை செய்து தேவையின்றி சுற்றுபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...