கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கு கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.
கோவை வரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளது. கடந்த 11ம் தேதி அதிகாலை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். அலாரம் அடித்ததை தொடர்ந்து தப்பி ஓடினார்.
தொடர்ந்து கோவை வரைட்டி ஹால் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில் கோவை மாநகர துணை ஆணையர் குற்றப்பிரிவு உமா உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மேற்கு குற்றப்பிரிவு நவராஜ் ராஜ்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில், தலைமை காவலர்களும் உமா, கார்த்திக், பூபதி, சித்தன் - மற்றும் காவலர்கள் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குர்ராணி பகுதியில் வசிக்கக்கூடிய அமீஸ் பிஸ்வால் என்பவர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை வரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளது. கடந்த 11ம் தேதி அதிகாலை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். அலாரம் அடித்ததை தொடர்ந்து தப்பி ஓடினார்.
தொடர்ந்து கோவை வரைட்டி ஹால் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில் கோவை மாநகர துணை ஆணையர் குற்றப்பிரிவு உமா உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மேற்கு குற்றப்பிரிவு நவராஜ் ராஜ்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில், தலைமை காவலர்களும் உமா, கார்த்திக், பூபதி, சித்தன் - மற்றும் காவலர்கள் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குர்ராணி பகுதியில் வசிக்கக்கூடிய அமீஸ் பிஸ்வால் என்பவர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.