கோவையில் ஸ்டேட் பேங்கை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற நபர் கைது!

கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கு கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை வரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளது. கடந்த 11ம் தேதி அதிகாலை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். அலாரம் அடித்ததை தொடர்ந்து தப்பி ஓடினார்.

தொடர்ந்து கோவை வரைட்டி ஹால் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில் கோவை மாநகர துணை ஆணையர் குற்றப்பிரிவு உமா உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மேற்கு குற்றப்பிரிவு நவராஜ் ராஜ்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில், தலைமை காவலர்களும் உமா, கார்த்திக், பூபதி, சித்தன் - மற்றும் காவலர்கள் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குர்ராணி பகுதியில் வசிக்கக்கூடிய அமீஸ் பிஸ்வால் என்பவர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...