கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.
இந்நிலையில், கோவை சங்கனூர் பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு கோவை நகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மற்றும் கார்களில் உலா வந்த நபரை மடக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்து அந்த நபர்களை அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பலர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், வலுக்கட்டாயமாக அமர வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு இ-பதிவு முறையில் பொதுமக்கள் வருகின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்டு கோவை சூலூரில் வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆதார் எண் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு செல்போன் எண் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், விதிமுறையை மீறியவர்கள், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.
இந்நிலையில், கோவை சங்கனூர் பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு கோவை நகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மற்றும் கார்களில் உலா வந்த நபரை மடக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்து அந்த நபர்களை அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பலர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், வலுக்கட்டாயமாக அமர வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு இ-பதிவு முறையில் பொதுமக்கள் வருகின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்டு கோவை சூலூரில் வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆதார் எண் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு செல்போன் எண் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், விதிமுறையை மீறியவர்கள், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.