கோவை: கோவை சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த 36 கைதிகள் கொரோனா பரவல் பீதியால் தலைமறைவாகியுள்ளனர்.
கோவை: கோவை சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த 36 கைதிகள் கொரோனா பரவல் பீதியால் தலைமறைவாகியுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் 1,700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் காரணமாக பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் நேரடியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவது இல்லை.
மாறாக, இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, நோய்கள் உள்ளதா எனக் கண்காணிக்கப்பட்டு 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நோய் பரவியதால் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காலங்களில் ஜாமீன் வழங்கப்பட்ட 40 கைதிகள் மாயமாகி விட்டனர். 4 பேர் மீண்டும் சிறைக்கு வந்து விட்டனர். இன்னும் 36 கைதிகள் கோவை சிறைக்கு வரவேண்டியுள்ளது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். இதற்கு, நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. தலைமறைவாக உள்ள 36 கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் மூலமாக பிடிவாரண்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் 1,700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் காரணமாக பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் நேரடியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவது இல்லை.
மாறாக, இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, நோய்கள் உள்ளதா எனக் கண்காணிக்கப்பட்டு 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நோய் பரவியதால் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காலங்களில் ஜாமீன் வழங்கப்பட்ட 40 கைதிகள் மாயமாகி விட்டனர். 4 பேர் மீண்டும் சிறைக்கு வந்து விட்டனர். இன்னும் 36 கைதிகள் கோவை சிறைக்கு வரவேண்டியுள்ளது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். இதற்கு, நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. தலைமறைவாக உள்ள 36 கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் மூலமாக பிடிவாரண்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.