கோவை: கோவை தொண்டாமுத்தூரில் இளம் பெண்ணிடம் அடிக்கடி தகாத முறையில் சில்மிஷம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது புகார் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூரில் இளம் பெண்ணிடம் அடிக்கடி தகாத முறையில் சில்மிஷம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது புகார் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 26, என்பவர் அடிக்கடி தகாத முறையில் ஈடுபட்டு தகராறு செய்து வந்தார். நேற்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரபாகரன் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடம் இவ்வாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீஸார் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு, பிரபாகரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் பிரபாகரனைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 26, என்பவர் அடிக்கடி தகாத முறையில் ஈடுபட்டு தகராறு செய்து வந்தார். நேற்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரபாகரன் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடம் இவ்வாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீஸார் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு, பிரபாகரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் பிரபாகரனைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.