கோவை: கோவை அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் அவரிடம் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் அவரிடம் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் மயானம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்க்கும்போது வீரகேரளத்தை சேர்ந்த சக்திவேல் (50), கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அப்போது, சக்திவேலை சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் மயானம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்க்கும்போது வீரகேரளத்தை சேர்ந்த சக்திவேல் (50), கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அப்போது, சக்திவேலை சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.