கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதியை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதியை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, பால் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை பிரதான சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில் வியாபாரம் நடைபெறுவதை அறிந்த வட்டாட்சியர் ராஜா அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது, வியாபாரம் நடப்பதை உறுதி செய்த வட்டாட்சியர் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் கடைக்கு சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, பால் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறை பிரதான சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில் வியாபாரம் நடைபெறுவதை அறிந்த வட்டாட்சியர் ராஜா அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது, வியாபாரம் நடப்பதை உறுதி செய்த வட்டாட்சியர் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் கடைக்கு சீல் வைத்தனர்.