கரும்புகடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கார்த்திகேய சிவசேனாபதி சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை..!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மக்களின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், கோரியுள்ள கோரிக்கை மனுவில்,

'கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் தொகை நிறைந்த இடமாகும். அப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை மருத்துவத்திற்குக் கூட அவர்களின் பகுதியை விட்டு சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழல் உள்ளது. எனவே, அங்கிருக்கும் மக்கள் தங்களது பகுதியிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்றும் மக்களுக்கு மருத்துவத் தேவைகள் எளிமையாக கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், தற்போது இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசு மருத்துவமனைகளின் தேவையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம்.

எனவே, கரும்புக்கடை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து மக்களை பயன்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதிப்பிற்குரிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறோம்.' என்று கோரியுள்ளார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...