வால்பாறை: கோவை வால்பாறையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வால்பாறையில் உள்ள வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து வீடு சேதமடைந்துள்ளது.
வால்பாறை: கோவை வால்பாறையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வால்பாறையில் உள்ள வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து வீடு சேதமடைந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக தவ் தே புயல் காரணமாக சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வால்பாறை சோலையார் அக்கா மலை நல்லகாத்து வாட்டர்பால்ஸ் கவர்கள் குரங்கு முடி சிறுகுன்றா சின்கோனா போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆங்காங்கே மின்கம்பத்தின் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டது.

இன்று மதியம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் சிவகுமார் லட்சுமணன் என்பவரின் வீட்டு பின் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் பின்புற சமையல் அறையின் பாத்ரூம் பகுதியில் இடிந்து விழுந்ததில் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதில் யாருக்கும் உயிருக்கு பாதிப்பு இல்லை. அண்ணா நகர் பகுதிகளில் அடுக்கடுக்காக வீடுகள் உள்ளதால், இடியும் நிலையில் உள்ள தடுப்பு சுவர்களை, அரசு அதிகாரிகள் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை பகுதியில் 114.மில்லி மீட்டரும், சோலையார் அணை 170மில்லி மீட்டரும், நீரார் அணை 127.மில்லி மீட்டரும் சின்னகள்ளார் 91 மில்லி மீட்டரும் மழை அளவாக பதிவாகியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக தவ் தே புயல் காரணமாக சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வால்பாறை சோலையார் அக்கா மலை நல்லகாத்து வாட்டர்பால்ஸ் கவர்கள் குரங்கு முடி சிறுகுன்றா சின்கோனா போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆங்காங்கே மின்கம்பத்தின் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டது.
இன்று மதியம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் சிவகுமார் லட்சுமணன் என்பவரின் வீட்டு பின் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் பின்புற சமையல் அறையின் பாத்ரூம் பகுதியில் இடிந்து விழுந்ததில் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதில் யாருக்கும் உயிருக்கு பாதிப்பு இல்லை. அண்ணா நகர் பகுதிகளில் அடுக்கடுக்காக வீடுகள் உள்ளதால், இடியும் நிலையில் உள்ள தடுப்பு சுவர்களை, அரசு அதிகாரிகள் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை பகுதியில் 114.மில்லி மீட்டரும், சோலையார் அணை 170மில்லி மீட்டரும், நீரார் அணை 127.மில்லி மீட்டரும் சின்னகள்ளார் 91 மில்லி மீட்டரும் மழை அளவாக பதிவாகியது.