பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.
பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியத் திட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000/- வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, ஏற்கெனவே அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் ரூ.2000/- வழங்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியோடு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று தொகையைப் பெற்றுச் சென்றனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள தங்களுக்கு இந்த உதவித்தொகை என்பது பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியத் திட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000/- வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, ஏற்கெனவே அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் ரூ.2000/- வழங்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியோடு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று தொகையைப் பெற்றுச் சென்றனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள தங்களுக்கு இந்த உதவித்தொகை என்பது பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.