பொள்ளாச்சியில் நள்ளிரவில் சேதமடைந்த மலைவாழ் மக்கள் குடிசைகள்... அச்சத்தில் கிராம மக்கள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.

இதில் ஆழியாறு அருகே 34 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் சுமார் ஏழு குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால், அந்தக் குடிசையில் இருந்த மக்கள் போக வழி தெரியாமல் பாறைகளில் தஞ்சமடைந்தனர்.



பின்னர், தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சேதமடைந்துள்ள குடிசைகளை அப்புறப்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஆழியார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.



மேலும், பொள்ளாச்சி வன சரகத்தில் உள்ள அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அருகில் தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...