பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதில் ஆழியாறு அருகே 34 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் சுமார் ஏழு குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால், அந்தக் குடிசையில் இருந்த மக்கள் போக வழி தெரியாமல் பாறைகளில் தஞ்சமடைந்தனர்.

பின்னர், தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சேதமடைந்துள்ள குடிசைகளை அப்புறப்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஆழியார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், பொள்ளாச்சி வன சரகத்தில் உள்ள அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அருகில் தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதில் ஆழியாறு அருகே 34 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் சுமார் ஏழு குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால், அந்தக் குடிசையில் இருந்த மக்கள் போக வழி தெரியாமல் பாறைகளில் தஞ்சமடைந்தனர்.
பின்னர், தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சேதமடைந்துள்ள குடிசைகளை அப்புறப்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஆழியார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், பொள்ளாச்சி வன சரகத்தில் உள்ள அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அருகில் தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.