கோவையில் பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வலியுறுத்தல்..!

கோவை: உபயோகம் இன்றி பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: உபயோகம் இன்றி பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உபயோகம் இன்றி பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும் என்பது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் என்.ஆர். ரவிசங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,

‘‘கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, தென்னக ரயில்வே சார்பில், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. தற்போது, மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், தென்னக ரயில்வே சார்பில், ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், பழுதடைந்து இயக்கப்படாத நிலையில், ஏராளமான பேருந்துகள், பணிமனைகளில் பயனின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் பற்றாக்குறை நிலவும் இச்சூழலில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும். அதன் பிறகு, வார்டுகளாக மாற்றப்பட்ட பேருந்துகளை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் நிறுத்த வேண்டும். படுக்கைகள் கிடைக்கப் பெறாமல் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, பேருந்துகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...