நீலகிரியில் புயல் மற்றும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வருகை..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து வருகின்றன.



குறிப்பாக, குன்னூர் கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகள் 283 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நீலகிரியில் உள்ள பேரிடர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட பேரிடர் குழுக்கள் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை மழையின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும், தாக்குதலை சமாளிக்க பேரிடர் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மீட்புக்கருவிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கமாண்டர் கணேஷ் பிரசாத் தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...