நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து வருகின்றன.

குறிப்பாக, குன்னூர் கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகள் 283 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நீலகிரியில் உள்ள பேரிடர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட பேரிடர் குழுக்கள் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை மழையின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும், தாக்குதலை சமாளிக்க பேரிடர் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மீட்புக்கருவிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கமாண்டர் கணேஷ் பிரசாத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து வருகின்றன.
குறிப்பாக, குன்னூர் கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகள் 283 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நீலகிரியில் உள்ள பேரிடர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட பேரிடர் குழுக்கள் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை மழையின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும், தாக்குதலை சமாளிக்க பேரிடர் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மீட்புக்கருவிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கமாண்டர் கணேஷ் பிரசாத் தெரிவித்தார்.