முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என அப்போலோ குழும தலைவர் தகவல்

பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...