கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி நகரில் சுற்றித்திரிந்த சுமார் 2,000 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி நகரில் சுற்றித்திரிந்த சுமார் 2,000 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை தடுக்கும் வகையில், கோவை மாவட்டம் முழுவதும், 2,500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று கோவை மாநகர் மற்றும் ரூரல் பகுதிகளில போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக சுமார் 2,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோவை காந்திபுரம் கிராஸ்கட்ரோடு சிக்னல் பகுதியில் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். துடியலூர் பகுதியில் தேவையின்றி பைக்குகளில் சுற்றிய நபர்களை, கோவை ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம் எச்சரித்து அனுப்பினார்.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை தடுக்கும் வகையில், கோவை மாவட்டம் முழுவதும், 2,500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று கோவை மாநகர் மற்றும் ரூரல் பகுதிகளில போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக சுமார் 2,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோவை காந்திபுரம் கிராஸ்கட்ரோடு சிக்னல் பகுதியில் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். துடியலூர் பகுதியில் தேவையின்றி பைக்குகளில் சுற்றிய நபர்களை, கோவை ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம் எச்சரித்து அனுப்பினார்.