திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முதற்கட்ட நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியது..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1135 ரேஷன் கடைகளிலுள்ள 7,51,045 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையான ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி தொடங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1135 ரேஷன் கடைகளிலுள்ள 7,51,045 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையான ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் முதல் கட்டமாக ரூ.2000 வழங்கும் பணியை தமிழக முதல்வர் கடந்த 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணி தொடங்கியது.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 1135 ரேஷன் கடைகளிலுள்ள 7,51,045 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையான ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி தொடங்கியது.



முன்கூட்டியே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில், பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் காலை 8 முதல் 12 மணி வரை சமூக இடைவெளியைக் கடைபிடித்து வரிசையாக வந்து இந்தத் தொகையினைப் பெற்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



முன்னதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் காங்கேயத்திலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரத்திலும், திருப்பூரில் திமுக எம்எல்ஏ செல்வராஜும் நிவாரணத் தொகையை வழங்கினர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...