பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் தயாராகிறது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருவதாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருவதாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த 2009 ஆம் ஆண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து இன்று பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் குருநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குருநாதன், பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் வரும் 18ஆம் தேதி முதல் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்படும். மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்படும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க புதிதாக பணியாளர்கள் நியமிக்க கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்,” என்றார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...