தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக சரவணன் ‘சஸ்பெண்ட்'..!

கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் அவரிடம், 18 லட்சம் ரூபாயை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. மேலும், அமைச்சருக்கு உதவியாளராக செயல்பட்டவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கமான பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால், இரு மாதங்களாக சரவணன் பணிக்கு வராமல் இருந்தார். அவரை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், சஸ்பெண்ட் செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...