கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் அவரிடம், 18 லட்சம் ரூபாயை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. மேலும், அமைச்சருக்கு உதவியாளராக செயல்பட்டவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கமான பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால், இரு மாதங்களாக சரவணன் பணிக்கு வராமல் இருந்தார். அவரை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், சஸ்பெண்ட் செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் அவரிடம், 18 லட்சம் ரூபாயை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. மேலும், அமைச்சருக்கு உதவியாளராக செயல்பட்டவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கமான பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால், இரு மாதங்களாக சரவணன் பணிக்கு வராமல் இருந்தார். அவரை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், சஸ்பெண்ட் செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.