போக்குவரத்து விதி மீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைப்பு : துணை ஆணையர் சரவணன் தகவல்.


5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது :-

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி,  நாள் ஒன்றிற்கு 650 முதல் 7௦௦ வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அன்று முதல் மக்களிடம் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றிற்கு  40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...