கோவை: கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பலமணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பலமணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. எனினும், இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலை க்குப் பின்னர் முதல் முறையாக, கொரோனா தொற்று நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிவதால் மேற்கொண்டு படுக்கை இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கின்றனர். எட்டுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்சில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை சரியில்லாத தாயின் அருகில் கவலையுடன் ஆம்புலன்சிற்குள் அமர்ந்திருக்கிறார்.
மருத்துவமனையில் தவறான நிர்வாகத்தால் அவர் மட்டுமின்றி ஏழு நோயாளிகள், ஆம்புலன்சிற்குள் மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களிலேயே சிகிச்சை வசதிகளைப் பொறுத்தவரை முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல காட்சி கடுமையான சூழலை வெளிப்படுத்துகிறது.
நோயாளிகள் தொடர்ந்து மூச்சு திணறும் நேரத்தில் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் மருத்துவமனை நிர்வாகம் போராடி வருவது தெளிவாகத் தெரிகிறது, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் படுக்கைகளுக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அருகில் இருக்கும் உறவினர்கள், படுக்கைகள் கிடைக்கும் என நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிகம் செலவாவதால் சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாதவர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு நேரம் காத்திருக்க நேரிடுகிறது என்று நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள்விரக்தியுடன் கூறுகின்றனர்.
"தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக எங்களால் பெரிய தொகையை தர இயலவில்லை,” என அவர்கள் கூறுகின்றனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள்அதிகபட்சமாக நிரம்பி விட்டது. கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள், கல்லூரிகள் மற்றும் அரங்குகளில் அமைக்கப்பட்ட பிற கொரோனா தொற்று பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இது தவிர, இதுபோன்ற இன்னும் ஒரு சோகமான நிகழ்வு இதே நாளில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு சிகிச்சைக்காக படுக்கைகள் கேட்டு ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளிகள் மூவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கேட்க கோவை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் நிர்மலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரது பதில் கிடைக்கவில்லை.