கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு வார்டில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் கொரோனா பரிசோதனை சிறப்பு செயல்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

இதையடுத்து செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை சிறப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, நகர் நல அலுவலர் மரு.ராஜா, உதவி நகர் நல அலுவலா் மரு.வசந்த் திவாகர், மத்திய மண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு வார்டில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் கொரோனா பரிசோதனை சிறப்பு செயல்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை சிறப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, நகர் நல அலுவலர் மரு.ராஜா, உதவி நகர் நல அலுவலா் மரு.வசந்த் திவாகர், மத்திய மண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.