முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐந்து கோப்புகளில் கையெழுத்து!

சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கும் உத்தரவு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்


சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கும் உத்தரவு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

1.முதல் அரசாணையாக கொரோனா நிவாரணம் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதன்படி முதல் தவணையாக மே மாதத்தில் ரூ.2000 ரொக்க தொகை 2 கோடியே, 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் அரசாணையில் இரண்டாவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த அரசாணை இந்த மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தில் மூன்றாவதாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

4. தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் துறை உருவாக்குவதற்கான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.

5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும் திட்டத்திலும் மு.க.ஸ்டாலின் ஐந்தாவதாக கையெழுத்திட்டார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...