500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாததால் விரக்தி அடைந்த தனியார் வங்கி காவலாளி குடிபோதையில் ரகளை



500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாததால் விரக்தி அடைந்த தனியார் வங்கி காவலாளி குடிபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்த ஐயப்பன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. குழந்தைகளுக்கு வழக்கமாக வாங்கும் அரிசியை வாங்க முடியாமல் ரேசன் அரிசி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அவர் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் அங்கிருந்த அரசு கார் ஒன்றில் லேசாக மோதினார். இதையடுத்து அவரது இருசக்கர வாகன சாவியை அங்கிருந்த ஓட்டுனர் ஒருவர் எடுத்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஐயப்பன் அரசு அதிகாரிகளையும் அரசையும் விமர்சித்து கூச்சலிட்டார். தொடர்ந்து ஏக வசனத்தில் அரசு அதிகாரிகளை விமர்சித்த அவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினரோடும் ஐயப்பன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக கோவை பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...