பொள்ளாச்சி ஆனைமலையில் இன்று 71 பேருக்கு கொரானா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று 16 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 10 பேருக்கும் தெற்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் ஆனைமலை பகுதியில் 22 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உறுதியான இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று பாதித்த இடங்களில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பொள்ளாச்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...