கோடை விடுமுறையில் கோவை நீதிமன்றங்கள் செயல்படும், தேதிகள் அறிவிப்பு!

கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு, மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

கிரிமினல் வழக்குகள் வாரந்தோறும், திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் வியாழன் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சிவில் வழக்குகளை, மே 5, 11, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் முறையே, மே 7, 13, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கிரிமினல் வழக்குகளை, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நாகராஜனும், சிவில் வழக்குகளை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமியும் விசாரணை செய்ய உள்ளனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...