கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு, மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுக்கள் மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
கிரிமினல் வழக்குகள் வாரந்தோறும், திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் வியாழன் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சிவில் வழக்குகளை, மே 5, 11, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் முறையே, மே 7, 13, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கிரிமினல் வழக்குகளை, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நாகராஜனும், சிவில் வழக்குகளை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமியும் விசாரணை செய்ய உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு, மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுக்கள் மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
கிரிமினல் வழக்குகள் வாரந்தோறும், திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் வியாழன் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சிவில் வழக்குகளை, மே 5, 11, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் முறையே, மே 7, 13, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கிரிமினல் வழக்குகளை, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நாகராஜனும், சிவில் வழக்குகளை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமியும் விசாரணை செய்ய உள்ளனர்.