கோவை கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38).நேற்று மதியம் தனது டிப்பர் லாரியில்சிங்கையன்புதூர்கல்குவாரியில் இருந்து முத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த மற்றொரு டிப்பர் லாரி ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரியின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுந்தரா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள கிணத்துக்கடவு போலீசார் லாரி டிரைவர் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38).நேற்று மதியம் தனது டிப்பர் லாரியில்சிங்கையன்புதூர்கல்குவாரியில் இருந்து முத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த மற்றொரு டிப்பர் லாரி ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரியின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுந்தரா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள கிணத்துக்கடவு போலீசார் லாரி டிரைவர் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.