கோவை: கோவையில் ஓட்ட பயிற்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு சக தீயணைப்பு வீரர்கள் ரூ.20 லட்சம் வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் ஓட்ட பயிற்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு சக தீயணைப்பு வீரர்கள் ரூ.20 லட்சம் வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நீண்ட ஓட்டப் பயிற்சியில் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று ஓடினார். ஆனால், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்உயிரிழந்தார்.
அவரது கடமை உணர்வை போற்றும் வகையில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டுதலின் பேரில்,தமிழகத்தில் உள்ள 2001 பேட்ஜ் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டினர். இந்த நிதியை உயிரிழந்த தீயணைப்பு வீரர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாரிடம் கூடுதல் இயக்குநர் சாகுல் அமீது, கோவை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.
கோவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நீண்ட ஓட்டப் பயிற்சியில் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று ஓடினார். ஆனால், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்உயிரிழந்தார்.
அவரது கடமை உணர்வை போற்றும் வகையில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டுதலின் பேரில்,தமிழகத்தில் உள்ள 2001 பேட்ஜ் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டினர். இந்த நிதியை உயிரிழந்த தீயணைப்பு வீரர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாரிடம் கூடுதல் இயக்குநர் சாகுல் அமீது, கோவை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.