குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி: குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம், போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
இந்த நிலையில், தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் யானைகள் முகாமிட துவங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும் என்பதால் குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம், போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
இந்த நிலையில், தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் யானைகள் முகாமிட துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும் என்பதால் குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.