கேஎம்சிஎச் சார்பில் ''முதியோர் மறுவாழ்வு'' மற்றும் ''விளையாட்டு மறுவாழ்வு'' கருத்தரங்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை உடற்பயிற்சிக் கல்லூரியின் சார்பில் 1994ம் ஆண்டு உடற்பயிற்சி இளங்கலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு உடற்பயிற்சி முதுகலை பட்டப் படிப்பையும் மற்றும் 2006ம் ஆண்டில் தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.



உடற்பயிற்சித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக கேஎம்சிஎச் உடற்பயிற்சிக் கல்லூரி இடைவிடாத முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டம் 100-வது முறை நடத்தப்பட்டதைக் கொண்டாடிட ''விளையாட்டு மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவம்பர் 18ம் தேதி ஒரு பயிலரங்கமும், ''முதியோர் மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவ. 19ம் தேதியன்று ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்த தேசிய கருத்தரங்கு மற்றும் பயிலரங்கை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கேஎம்சிஎச் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் தவமணி டி.பழனிசாமி, கேஎம்சிஎச் மருத்துவமனை இயக்குநர் அருண் என்.பழனிசாமி, கேஎம்சிஎச் முதல்வர் வி.குமரன், தலைமை செயல் அலுவலர் புவனேஸ்வரன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, 100-வது தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தை குறிக்கும் வகையில் ''Souvenir 16'' என்ற நூலை நல்ல ஜி.பழனிசாமி வெளியிட்டார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...