கோவை: கொரோனா தொற்று இரண்டாம் அலை பெருகிவரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் அக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
கோவை: கொரோனா தொற்று இரண்டாம் அலை பெருகிவரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் அக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், திரையரங்கம், மால் போன்ற பொது இடங்களில் 50 சதவீத மட்டுமே மக்கள் பயன்படுத்த அனுமதி மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இந்த விதிமுறைகளை பின்பற்றும் விதமாக பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பயணிகள் அமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், திரையரங்குகளில் சமூக இடைவெளி மற்றும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற விதிகளை தீவிரமாக பின்பற்றுகின்றனர்.
அதேபோல, திரையரங்குகளுக்கு வருபவர்களில் உடல் வெப்பம் கண்காணிக்கப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. மேலும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லாவிட்டால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரையரங்கம், மால் போன்ற பொது இடங்களில் 50 சதவீத மட்டுமே மக்கள் பயன்படுத்த அனுமதி மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த விதிமுறைகளை பின்பற்றும் விதமாக பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பயணிகள் அமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திரையரங்குகளில் சமூக இடைவெளி மற்றும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற விதிகளை தீவிரமாக பின்பற்றுகின்றனர்.
அதேபோல, திரையரங்குகளுக்கு வருபவர்களில் உடல் வெப்பம் கண்காணிக்கப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. மேலும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லாவிட்டால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.