கோவை: வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அங்கு தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறி பா.ஜ.க மாவட்ட தலைவரும், தலைமை ஏஜென்டுமான நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, தங்குமிடம், உணவு வசதி கூட இங்கு கிடையாது எனவும்,அவற்றை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், ஆனால் அதை அரசு முறையாக செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், கொரோனா நோய் தொற்று காலத்திலும் அனைத்து கட்சிகளை சேந்தவர்களும் குறுகிய இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்ட போது, அதிகாரிகள் நாளை முதல் உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும், அப்படி அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் நந்தகுமார் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அங்கு தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறி பா.ஜ.க மாவட்ட தலைவரும், தலைமை ஏஜென்டுமான நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, தங்குமிடம், உணவு வசதி கூட இங்கு கிடையாது எனவும்,அவற்றை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், ஆனால் அதை அரசு முறையாக செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், கொரோனா நோய் தொற்று காலத்திலும் அனைத்து கட்சிகளை சேந்தவர்களும் குறுகிய இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்ட போது, அதிகாரிகள் நாளை முதல் உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும், அப்படி அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் நந்தகுமார் தெரிவித்தார்.