திருப்பூர்: திருப்பூர் அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக கணவனை கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக கணவனை கொலை செய்த தாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் அருகே உள்ள துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன்(52).கடந்த மாதம் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குணமடைந்த ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் நேற்றிரவு கோவையில் இருந்து துடுப்பதிக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, ஜோதிமணி இருவரும் சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றனர். மீண்டும் காருக்கு வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் போது, காரிலிருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து கார் முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

அப்போது, ராஜா, ஜோதிமணி உடனடியாக இறங்கி ரங்கராஜனை காப்பாற்ற முயன்றுள்ளார். அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியதில், ரங்கராஜன் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மனைவி ஜோதி மணியின் மீது ஒரு சந்தேக கண் இருந்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் கணவரை திட்டமிட்டு காரோடு எரித்துக்கொன்றதாக ஜோதி மணி தெரிவித்திருக்கிறார். அவருக்கு உதவியாக ராஜா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜோதி மணி, ராஜா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவியே உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன்(52).கடந்த மாதம் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குணமடைந்த ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் நேற்றிரவு கோவையில் இருந்து துடுப்பதிக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, ஜோதிமணி இருவரும் சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றனர். மீண்டும் காருக்கு வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் போது, காரிலிருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து கார் முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
அப்போது, ராஜா, ஜோதிமணி உடனடியாக இறங்கி ரங்கராஜனை காப்பாற்ற முயன்றுள்ளார். அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியதில், ரங்கராஜன் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மனைவி ஜோதி மணியின் மீது ஒரு சந்தேக கண் இருந்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் கணவரை திட்டமிட்டு காரோடு எரித்துக்கொன்றதாக ஜோதி மணி தெரிவித்திருக்கிறார். அவருக்கு உதவியாக ராஜா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜோதி மணி, ராஜா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவியே உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.