பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கர் நகரில் மின் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர் ராஜ்குமார், ஒப்பந்த ஊழியர் சங்கிலி பாண்டி இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின் ஊழியர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மின்வாரிய ஊழியர்கள் ராஜ்குமார், சங்கிலி பாண்டி இருவரையும் அவர்கள் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு மின்வாரிய ஊழியர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மின்வாரிய ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து சதீஷ்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கர் நகரில் மின் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர் ராஜ்குமார், ஒப்பந்த ஊழியர் சங்கிலி பாண்டி இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின் ஊழியர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது மின்வாரிய ஊழியர்கள் ராஜ்குமார், சங்கிலி பாண்டி இருவரையும் அவர்கள் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு மின்வாரிய ஊழியர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மின்வாரிய ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து சதீஷ்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.