நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு சுப்பராயன் எம்.பி கோரிக்கை!

திருப்பூர்: நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

மோடி ஆட்சிக்கு வந்தால் சிறு குறு தொழில்கள் வளம் பெறும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் , இந்த 7 வருட ஆட்சியில் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்து , கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வளர்ந்து வருகின்றன.

நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பின்னலாடைத் தொழில் , தற்போது தான் மீண்டு வருகிறது. இந்தநிலையில், நூல் விலையேற்றம் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நூல் விலை தொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு 2 கடிதங்கள்எழுதியுள்ளேன். தற்போது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் பஞ்சாலையில் இருந்து மத்திய அரசே தரமான நூல்களை தமிழகத்திற்கு தர வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆளுநர் ஜனநாயக முறைக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். புதிய அரசு அமைவதற்கு முன்னதாக அவசர கதியில் துணை வேந்தர்களை நியமிப்பது ஜனநாயக விரோதம். தேர்தலில் திமுக தலைமையில் அங்கம் பெற்றுள்ள விசிக கட்சிக்கு பணியாற்றிய இருவர் அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் சாதி படுகொலை.” இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...