பாகிஸ்தான் கடற்படையினர் நடவடிக்கை இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 43 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.  இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் அத்துமீறியதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை ஒட்டிய அரபிக்கடற்பகுதியில் நேற்று இந்திய மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தனர்.

அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...