மாநகராட்சி அலுவலகத்தில் சுவச் சர்வேக்ஷன் 2017 கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று காலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பில் சுவத் சர்வேக்ஷன் 2017  கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. 



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் சுவச் சர்வேக்ஷன் கீழ் 500 நகரங்கள் மற்றும் அந்தந்த நகர்ப்புறம், சுகாதார நிலைகள் அடிப்படையில் மதிப்பீட்டு தரவரிசை வழங்கப்படும். இதில் மாநகராட்சி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு செய்யப்பட்ட பணிகள் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பகுதிகளை தரவரிசை மதிப்பீடு வழங்கப்படும். 



மேலும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா நகரங்கள், குறைவான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இருந்து ஜனவரி 2017 இல் நடத்தப்படும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கான ஆய்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான நம்ம கோவை அணி, கோ கோயமுத்தூர் அணி, சுவட்ச் பாரத் தூதுவர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்களுக்கு நகரின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுகாதார நிலைகளில், சுத்தமாக வைக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறந்தவெளி கழிப்பறைகள் பற்றிய பிரச்சாரம் போன்றவற்றை கூட்டத்தில் பேசப்பட்டது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...