சிங்காநல்லூர் குளக்கரையில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் திறப்பு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.



இம்மையம் குளக்கரையில் மரக்கன்றுகளை அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 18 ஜூன் 2016ம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் திட்டம் தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். 



இத்திட்டத்தில், குளங்களை பாதுகாப்பதற்கும், குளத்தின் மண் அரிப்பை தடுத்து வளப்படுத்துவதற்கும் குளத்தை சுற்றி பனை மரங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பனை மரம் நாற்றுப்பண்ணை மையம் குளத்தின் அருகில் திறக்கப்பட்டது.



இதன் மூலம் குளத்தை சுற்றி மரக் கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...