கோவையில் நடைபாதையில் அழகுக்காக வைக்கப்பட்ட அலங்கார விளக்கு வெடித்தது: 4 பேர் படுகாயம்!

கோவை: கோவையில் கண்ணைக் கவரும்விதமாக அழகிய அலங்கார விளக்குகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவையில் கண்ணைக் கவரும்விதமாக அழகிய அலங்கார விளக்குகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி பாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.



நடைபாதையின் ஓரத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.



அந்த விளக்குகளில் ஒன்று நேற்று திடீரென வெடித்துச் சிதறியதில் அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அலங்கார விளக்கு மற்றும் சிதறிய சிறிய துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். திடீரென அலங்கார விளக்கு வெடித்ததால் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். அதன்பிறகு வெடித்தது விளக்கு என்று தெரிந்தவுடன் இயல்புநிலைக்கு திரும்பினர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...