கோவை: கோவையில் கண்ணைக் கவரும்விதமாக அழகிய அலங்கார விளக்குகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவையில் கண்ணைக் கவரும்விதமாக அழகிய அலங்கார விளக்குகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அது திடீரென வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி பாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

நடைபாதையின் ஓரத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த விளக்குகளில் ஒன்று நேற்று திடீரென வெடித்துச் சிதறியதில் அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அலங்கார விளக்கு மற்றும் சிதறிய சிறிய துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். திடீரென அலங்கார விளக்கு வெடித்ததால் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். அதன்பிறகு வெடித்தது விளக்கு என்று தெரிந்தவுடன் இயல்புநிலைக்கு திரும்பினர்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி பாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
நடைபாதையின் ஓரத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த விளக்குகளில் ஒன்று நேற்று திடீரென வெடித்துச் சிதறியதில் அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அலங்கார விளக்கு மற்றும் சிதறிய சிறிய துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். திடீரென அலங்கார விளக்கு வெடித்ததால் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். அதன்பிறகு வெடித்தது விளக்கு என்று தெரிந்தவுடன் இயல்புநிலைக்கு திரும்பினர்.