கோவை: ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது, கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
கோவை: ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது, கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 8-ஆம்தேதி துவங்கி ஏப்ரல் 8-ஆம்தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ள இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இந்த எம்.பி.க்கள் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது ஏதுவாக இருக்காது. ஆகவே தற்போது கூட்டப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான நிதிமசோதா குறித்த விவாதங்களை மட்டும் நடத்திவிட்டு நாடாளுமன்ற கூட்ட தொடரை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.