உதகை அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற ஆசாமிக்கு ஆயுள் தண்டனை: உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை: உதகை அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற ஆசாமிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.


கோவை: உதகை அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற ஆசாமிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

உதகை அருகே உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த்என்ற ஆனந்த்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணிக்கும் தகாத உறவு இருந்து வந்தது.

ஆயிஷாவுக்கு கணவன் இல்லாததால் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் ஆயிஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாகக்கூறி அடிக்கடி சந்தேகிப்பதுடன் குடிபோதையில் ஆயிஷாவுடன் ஆனந்த் குமார் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 24.06.2017 அன்று அவர்கள் இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில் ஆயிஷா மீது ஆனந்த் குமார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்தஆயிஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஆயிஷா தனது மரண வாக்குமூலத்தி்ல் ஆனந்த் குமார் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகக் கூறினார்.



ஆயிஷாவின் மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்த் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...