தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்தும் பணி துவக்கம்

கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.


கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.

தேர்தல் காலத்தில் விதிமீறல்களை கண்டறிந்து, தடுக்கும் பணியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களது வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் அறியும் கருவி பொருத்துவது வழக்கம்.

அந்த கருவி மூலம், குறிப்பிட்ட வாகனம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் அறிந்து, அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசம்பாவிதம், விதிமீறல் நடப்பதாக புகார் வந்தால், அதற்கு மிக அருகேயுள்ள ரோந்து வாகன குழுவினரை, அங்கு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க, ஜி.பி.எஸ்., கருவி பயனுள்ளதாக இருக்கும்.

அதன்படி, கண்காணிப்பு குழுவினரின் ரோந்து வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணி, இன்று தொடங்குகிறது. இதேபோல, சட்டசபை தொகுதிகளுக்கான மையங்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...