கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.
கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.
தேர்தல் காலத்தில் விதிமீறல்களை கண்டறிந்து, தடுக்கும் பணியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களது வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் அறியும் கருவி பொருத்துவது வழக்கம்.
அந்த கருவி மூலம், குறிப்பிட்ட வாகனம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் அறிந்து, அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசம்பாவிதம், விதிமீறல் நடப்பதாக புகார் வந்தால், அதற்கு மிக அருகேயுள்ள ரோந்து வாகன குழுவினரை, அங்கு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க, ஜி.பி.எஸ்., கருவி பயனுள்ளதாக இருக்கும்.
அதன்படி, கண்காணிப்பு குழுவினரின் ரோந்து வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணி, இன்று தொடங்குகிறது. இதேபோல, சட்டசபை தொகுதிகளுக்கான மையங்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் விதிமீறல்களை கண்டறிந்து, தடுக்கும் பணியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களது வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் அறியும் கருவி பொருத்துவது வழக்கம்.
அந்த கருவி மூலம், குறிப்பிட்ட வாகனம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் அறிந்து, அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசம்பாவிதம், விதிமீறல் நடப்பதாக புகார் வந்தால், அதற்கு மிக அருகேயுள்ள ரோந்து வாகன குழுவினரை, அங்கு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க, ஜி.பி.எஸ்., கருவி பயனுள்ளதாக இருக்கும்.
அதன்படி, கண்காணிப்பு குழுவினரின் ரோந்து வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணி, இன்று தொடங்குகிறது. இதேபோல, சட்டசபை தொகுதிகளுக்கான மையங்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.