கோவை மாநகராட்சியும் அறம் அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் உதவி மைய அலுவலகம் துவக்கம்

கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையத்தின் அலுவலக திறப்பு விழா மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று (இன்று) ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

குழந்தைகள் உதவி மையம்:-

கோவை மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் உதவி சேவை எண் 81900 00300 செயல்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையத்தை அறம் பொதுநல அறக்கட்டளையின் குழு நிர்வகிக்கும். அந்த குழுவில் மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சமூக சேவகர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்மையத்திற்கு வரும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளும் மற்றும் தீர்வுகளை நோக்கிய வழிமுறைகளும் இலவசமாக பரிந்துரைப்பார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளியில் இந்த மையம் செயல்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.



ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையம்:-

கோவை ஸ்மார்ட் நகரம் ஆவதால் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், நவீன கற்பிக்கும் முறைகள், சிறந்த பள்ளிவளாக கட்டமைப்பு வசதிகள், பசுமை வளாக திட்டங்கள், காய்கறி மற்றும் பூந்தோட்டம், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அறம் பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூகநல  பணிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ''ஹாப்பி சைல்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்'' வெற்றி படி திட்டங்கள் நாட்டின் சிறந்த 100 திட்டங்களில் skoch award'' பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...