மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் பாதையில் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை மூட ரூ.2 கோடியில் ஒரே நாளில் சுரங்கப்பாலம்


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை ரயில் சேவை இயக்கபட்டு வருகிறது. இந்த ரயில் தடத்தினை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல மேம்பாலங்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்ல வேண்டி இருந்தது. 

இந்த நிலையில் அகில இந்திய அளவில் ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை ரயில்வே நிர்வாகம் மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு இடையே ஊட்டி ரயில் பாதையில் இரண்டு ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை மூட திட்டமிட்டிருந்தது. 

இதனையொட்டி பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினை கருத்தில் கொண்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே சுரங்க பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. முதலில் பிளாக் தண்டர் அருகே உள்ள ஆட்கள் இல்லாத ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் புதனன்று (இன்று) துவங்கின.

இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் தண்டவாளத்தை தனியாக பிரித்து எடுத்தனர். நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ரயில் பாதையின் குறுக்கே பெரிய பள்ளம் தோண்டி தரையில் கான்கிரிட் சிலாப்புகள் பதிக்கப்பட்டன. 

அதன் மீது 12 அடி நீளத்துக்கு நாலரை மீட்டர் அகலம், உயரத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிமென்ட் கான்கிரிட் சுரங்கப்பாலத்தை பதித்து 5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணியினை முடித்தனர்.

இந்த பணிக்காக பெங்களூரிலிருந்து 400 டன் எடைகள் துாக்கும் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் பின் மண்ணை கொட்டி சமம் செய்து அதன் மீது ரயில் தண்டவாளத்தை அமைத்தனர். ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. 

ரயில் தடத்தில் போக்குவரத்தினை நிறுத்தாமல் அதுவும் ஒரே நாளில் பாலத்தை அமைத்த நிகழ்வு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றதை பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். மாலையில் உதகையில் இருந்து வந்த மலை ரயில் எவ்வித பாதிப்பும் இன்றி வந்து சேர்ந்தது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...