500, 1000 ரூபாயை மாற்ற தபால் துறையின் சார்பில் பணபரிமாற்ற சேவை வாகனம் துவக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில், தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை மாற்றிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்தினை சந்தித்து வரும் நிலையில், அதனைப்போக்கும் வகையில் தபால் துறையின் சார்பில் நடமாடும் பணபரிமாற்றச் சேவை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை அரசினர் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்த பணபரிமாற்ற சேவை வாகனத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இதனால், பொதுமக்களின் நேரம் சேமிக்கப்படுவதாகவும், சிரமங்கள் குறைவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சேவை மையத்தில் பணத்தை பெறவும், டெபாசிட்டும் செய்ய முடியும்.



பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகல்களைக் கொடுத்து நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...