கோவை: கோவை மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரடைப்பில் நேற்று நள்ளிரவில் திடீரென காலமானார்.
கோவை: கோவை மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரடைப்பில் நேற்று நள்ளிரவில் திடீரென காலமானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 52). இவர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை சித்ரா பகுதியிலுள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகக்கூறி ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் கோவை உக்கடம், பெரியகடைவீதி, வெரைட்டி ஹால் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திலும் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர். கடைசியாக உக்கடத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று ஆர்.எஸ்.புரத்தில் கடந்த ஒரு வருடமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பில் இறந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் அனைத்து தரப்பு மக்களிடமும், செய்தியாளர்களிடமும் மிகவும் அன்போடும், மரியாதையோடும், பாசத்தோடும் பழகக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 52). இவர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை சித்ரா பகுதியிலுள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகக்கூறி ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் கோவை உக்கடம், பெரியகடைவீதி, வெரைட்டி ஹால் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திலும் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர். கடைசியாக உக்கடத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று ஆர்.எஸ்.புரத்தில் கடந்த ஒரு வருடமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பில் இறந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் அனைத்து தரப்பு மக்களிடமும், செய்தியாளர்களிடமும் மிகவும் அன்போடும், மரியாதையோடும், பாசத்தோடும் பழகக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.