உதகையில் திருமணம் செய்வதாக கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை!

நீலகிரி: உதகை அருகே திருமணம் ஆசை கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


நீலகிரி: உதகை அருகே திருமணம் ஆசை கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி வினோத் (34). ஏற்கனவே திருமணமான இவர் சமையல் கலை படிப்பு முடித்து வேலை தேடி வந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கர்ப்பமான மாணவியின் கருவை கலைக்க மாத்திரைகள் கொடுத்து கருவை கலைத்துள்ளார்.

பின்னர் மீண்டும் திருமண ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கருவினை கலைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ஆண்டனி வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு உதகை மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், ஆண்டனி வினோத்துக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். போக்சோ சட்டத்தில் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடக்கது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....