உலக பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் 1098 என்ற ஹெல்ப்லைன் குறித்து அறிந்திருக்க வேண்டுமென விழிப்புணர்வு!

கோவை: பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் 1098 என்று ஹெல்ப்லைன் குறித்தும், காவலன் ஆப் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்று சுகாதார செவிலியர் உஷா தெரிவித்தார்.


கோவை: பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் 1098 என்று ஹெல்ப்லைன் குறித்தும், காவலன் ஆப் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்று சுகாதார செவிலியர் உஷா தெரிவித்தார்.

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புரவிபாளையத்தில் பெண் குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகள் நல திட்ட அலுவலர் மீனாகுமாரி தலைமையேற்ற இந்நிகழ்ச்சியில், பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்து சுகாதார செவிலியர் உஷா பேசினார். மேலும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கான, தன்னம்பிக்கை வளர்த்தல், உடல்நலம் மற்றும் பெண் குழந்தைகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சைல்ட் ஹெல்ப்லைன் 1098 பற்றியும் காவலன் ஆப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பெண் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....