திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக கோவில்வழி, பாளையக்காடு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே பேரணியை நிறைவு செய்தனர்.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியில் விவசாயிகளின் பேரணிக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய அரசின் தோல்வியை உறுதி செய்து வருவதாகவும், விவசாயிகளின் போராட்டமே மத்திய அரசின் அராஜக போக்கை நிறைவு செய்யும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக கோவில்வழி, பாளையக்காடு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே பேரணியை நிறைவு செய்தனர்.
அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியில் விவசாயிகளின் பேரணிக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய அரசின் தோல்வியை உறுதி செய்து வருவதாகவும், விவசாயிகளின் போராட்டமே மத்திய அரசின் அராஜக போக்கை நிறைவு செய்யும் என்று தெரிவித்தார்.