கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, உடல் நிலை பாதிகப்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, உடல் நிலை பாதிகப்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவு, தெரிவிக்கும் விதமாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் வேளாண் கருவிகளுடன் விவசாயிகள் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவில் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை முலங்கியப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் நடைபெறும். தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம்" என்றார்.

இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவு, தெரிவிக்கும் விதமாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் வேளாண் கருவிகளுடன் விவசாயிகள் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவில் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை முலங்கியப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் நடைபெறும். தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம்" என்றார்.
இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.