கோவையில் குடியரசு தின விழா: கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்

கோவை: 72 -ஆவது குடியரசு தின விழா கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


கோவை: இன்று காலை நடைபெற்ற 72 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவில், 92 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.



இவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 10 மாதங்கள் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்தமைக்காக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



அதேபோல, விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய காவலர்கள், மற்றும் மழை, புயல், வெள்ளம், இயற்கை சீற்றங்களில் தங்களுடைய உயிர்களை பணயம் வைத்து பணியாற்றிய காவல் துறையைச் சேர்ந்த 124 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள், முதியோர் பென்சன், விதவை பென்ஷன், ஆதிதிராவிட நலத் துறை சார்பாக பயனாளிகளுக்கு உதவித்தொகை, வேளாண் துறை சம்பந்தப்பட்ட அவர்களுக்கான விருதுகள் மற்றும் உதவித் தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் குடியரசு விழா மற்றும் சுதந்திர தின விழாக்களில் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால், அரசு நலத்திட்ட உதவிகளை இந்த முறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், காவலர் குடும்பங்கள் சேர்ந்தவர்கள், ஆயுதப்படை போலீசார், அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...